Story Tag: Tamilnadu
silicone hose manufacturers- silicon double layer hose flexaflexhoses.in
FlexaFlex Hose Industries is the best supplier of Silicon Hoses, silicon double layer hose, silicone hose manufacturers, FDA Grade, Silicon Marine Hose.Silicon Double Layer Hose is used in Hot air suction, extraction and blow – for ceramic kiln inlet/outlet hose, Plastic raw material dryers, Flexographic-Rotogravure & Offset Printing Machine, yarn drying units, Plastic processing industry, packaging industry, blown film plants, and also for lamination and coating, carrying dusty particle at high temperatures. Flexaflex hose industries is the leading Silicone Hose Manufacturers in Coimbatore, Tamil Nadu, India.Depending on installation or operating conditions, the vacuum or pressure values may differ from those stated in the table. In doubtful cases, provide a description of the application you have in mind, and we will pleased to advice you. Alternative sizes and colours, different tolerances etc. can be supplied on request. Technical Data (at 20°C)
Hoses-Hose Suppliers-Hose Manufacturers-FlexaFlex flexaflexhoses.in
FlexaFlex Hose Industries is the leading Hose Suppliers In Coimbatore, Tamil Nadu, India. We have wide range of Quality hoses are used in varied Industries. We import German Flexible Hoses and supply to Various OEMS(Original Equipment Manufacturer) and End users of industries like Plastic, Printing, Textile, food and Pharma, wood working, Floor care, Ceramic ,Pollution Control, HVAC, Laser, / Plasma cutting etc., FlexaFlex Hose Industries is the Leading Hose Suppliers in Coimbatore, Tamil nadu, India actively engaged in importing technical industrial hoses from Germany and Europe and also involved in contract manufacturing of various products in “FLEXAFLEX” brand and catering to the needs of industries
பலமான பிரபலங்களை எதிர்த்து 'மேஜர்' கட்சிகள் திட்டமிட்டு செய்ததா? dinamalar.com
அண்ணன் – தம்பி தேர்தலில் எதிர் எதிராக நின்றாலும், ஒருவரை மற்றொருவர் தோற்கடிக்கத் தான் மல்லுக்கட்டுவார்கள். இப்படித்தான் நிஜமான தேர்தல் நடக்கிறது என்று நம்பி, மக்களும் வாக்களிக்கின்றனர்.ஆனால், இம்முறை முக்கிய தலைவர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது, இது நிஜ தேர்தல்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.கொளத்துார் தொகுதியில், மூன்றாவது முறையாக, ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருடன் மோத வலுவான வேட்பாளரை தேடினர். பிரபல நடிகர் யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா? என விசாரித்தனர்; யாரும் சிக்கவில்லை. அதனால், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விரும்பிய, ஆதிராஜாராமை இங்கே நிற்க வைத்துள்ளனர். அவர், கொளத்துார் தொகுதிக்கு விருப்ப மனுவே போடவில்லை. இந்த வெயில்ல கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டி இருக்குமே என ஆதி தயங்கியுள்ளார். உற்சாகம் கொடுத்து சம்மதிக்க வைத்ததாக தகவல். இங்கு போட்டியிட, உதயநிதி விருப்ப மனு போட்டு காத்திருந்தார். அவரை எதிர்க்கத் தயாரானார் குஷ்பு. மூன்று மாதமாக வேலையும் பார்த்தார். ஆனால்
130 தொகுதிகள் தி.மு.க., – அ.தி.மு.க., நேரடி போட்டி dinamalar.com
சென்னை : தி.மு.க. நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை அடுத்து சட்டசபை தேர்தலில் 130 தொகுதிகளில் அ.தி.மு.க. – தி.மு.க. இடையே நேரடி போட்டி நடக்க உள்ளது
தெரிய வந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில் தமிழக தேர்தல் களம் களைகட்டுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் நேற்று போடி தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் ஏப். 6ல் நடக்க உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடித்து தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஆளும் அ.தி.மு.க.வின் இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ம் தேதி வெளியானது.
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. – தி.மு.க. இடையே 130 தொகுதிகளில் நேரடி போட்டி தென்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. – மக்கள் நீதி மய்யம் – அ.ம.மு.க. – நாம் தமிழர் கட்சி – தே.மு.தி.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் நாம் தமிழர் மற்றும் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகின்றன.
மாற்றம்… ஏமாற்றம்! dinamalar.com
ஜெயலலிதா பாணியில் அரசியல் செய்ய விரும்புகிறார். தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும், விசாரணையின்றி நீக்கிவிட வேண்டும் என்கிறார். எந்த தேர்தல் வந்தாலும், ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே வாய்ப்பளிப்பதால், மற்றவர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்; இந்த நிலையை மாற்ற வேண்டும். புதியவர்கள் கட்சிக்கு வர வேண்டும் என்றால், கட்சிப் பொறுப்புகள் மாற்றி, மாற்றி கொடுக்க வேண்டும் என்கிறார். இது, செயல் தலைவர் பொறுப்புக்கு வந்ததுமே, ஸ்டாலின் பற்றி இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொன்னது.அண்ணன் அழகிரி மற்றும் அவரது ஆட்கள் மீது எடுத்த அதிரடியான ஒழுங்கு நடவடிக்கையை பார்த்தபோது, ஸ்டாலின் சொன்ன சொல் தவறவில்லை என மகிழ்ச்சி அடைந்தனர்.எல்லா நிலைகளிலும், கட்சியை புதிதாக கட்டமைக்க விரும்பிய ஸ்டாலின் சிந்தனைக்கு உரம் போட்டவர், மருமகன் சபரீசன். அவர் சொன்னதை ஏற்று கட்சியை மட்டுமல்ல, உடலையும் மாற்றினார் ஸ்டாலின்.காலையில் எழுந்து, 'வாக்கிங்' போவதில் துவங்கி, வார இறுதியில் சைக்கிள் பயணம் செல்வது, செயற்கை முடி வைத்தது என எல்லாமே சபரீசன் யோசனைப்படி நடந்தது.மாவட்டங்களில், கட்சிக்காக சொந்த கட்டடம் கட்டியது;
பா.ஜ., ஏன் வரக் கூடாது? dinamalar.com
'தமிழகத்தில், பா.ஜ., நுழைந்து விடக் கூடாது என்பதால், எவ்வளவு குறைவான தொகுதிகள் ஒதுக்கினாலும், அதைக் ஏற்றுக் கொள்கிறோம்' என, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., — கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் அனைத்தும் கூறுகின்றன. தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் இதைச் சொல்லி தான், அக்கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுத்து, தன் காலுக்கு கீழே வைத்திருக்கிறார். இந்த அவமானத்தை மறைத்தபடி, வெளியே வந்து, 'பா.ஜ., வரக் கூடாது என்பதால் தான்…' என, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 'பிலிம்' காட்டுகின்றனர். அது சரி, தமிழகத்தில் பா.ஜ., ஏன் வரக் கூடாது? நம் நாட்டில், அதிக மாநிலங்களில், பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கிறது. நம் அருகில் இருக்கும் கர்நாடகாவில் கூட, அக்கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. கிறிஸ்துவர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாநிலங்களிலும், இஸ்லாமியர் அதிகம் வாழும், உ.பி., போன்ற மாநிலங்களிலும், பா.ஜ., தான் ஆட்சி செய்கிறது. அங்கெல்லாம், சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனரா… அப்படி இருந்தால், பா.ஜ., எப்படி ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும்?
வாக்காளர்களுக்கு அனைவருக்கும் கையுறை வழங்கப்படும்: சத்யபிரதா சாகு dinamalar.com
சென்னை: வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 19ம் தேதி முடிவடைகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சுமார் 50 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் வெப் கேமரா கண்காணிப்பில் கொண்டுவரப்படும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 4.97 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 76 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
திமுக.,வுக்கு போட்டியாக அதிமுக அறிவிப்பு dinamalar.com
சென்னை : 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 18 ஆயிரம் ரூபாயும், ஆறு சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்' என, தி.மு.க.,வுக்கு போட்டியாக, அ.தி.மு.க.,வும் அறிவித்துள்ளது. தேர்தலில் பெண்களை கவரும் முயற்சியாக, இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., இந்த இலவச திட்டத்தை அறிவித்துள்ளனர்.
விரைவில் தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன், ஆலோசனை நடத்தினர். அதன்பின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி: உலக மகளிர் தினத்தை ஒட்டி, அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துகள்.
மகளிர் நலனுக்காக, குடும்பத்திற்கு ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
சமூகத்தில், பொருளாதார சமநிலை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்பத் தலைவியின் கையில், மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, விரைவில் வெளியிடப்படும். அதில், பல்வேறு திட்டங்கள், மக்களின் மனம் நிறைவடையும் அறிவிப்புகள் இடம்பெறும். தேர்தல் அறிக்கையை, பத்து நாட்களாக தயாரித்து வருகிறோம். இதில் எப்படியோ சில விஷயங்கள் கசிந்து விட்டன. அதை வைத்து, ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில், குடும்பத் தலைவிக்கு, 1,000 ரூபாய் என அறிவித்துள்ளார்.
தமிழகம் காணாமல் போகும்! dinamalar.com
பா.-விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ – மெயில்' கடிதம்: தனித்து நின்று வெற்றி பெற முடியாதவரே, கூட்டணி சேருவர். அரசியல் கட்சிகளும், இதையே தான் செய்கின்றன. தனித்து நின்று, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்று தெரியும் போது, கூட்டணி சேர்கின்றன. அதெல்லாம் சரி… கூட்டணி அமைக்கும் கட்சிகளின் கொள்கையாவது ஒன்றாக இருக்கிறதா என்று பார்த்தால், ஒன்றுமில்லை. அவர்களின் ஒரே கொள்கை, பொதுப்பணத்தை வாரிச் சுருட்டிக் கொள்வது தான்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. அது எப்படி, அவ்விரு கட்சிகளிடம் மட்டும் இவ்வளவு பணம் சேர்ந்தது என்பதைப் பற்றி, நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்க்கிறோமா… அத்தனையும், நம் பணம் என்பதை உணர்ந்திருக்கிறோமா! மக்கள் நலத்திட்டங்களில் கொள்ளையடித்த பணத்தை மூலதனமாக வைத்து தான், தேர்தல் கூட்டணிப் பேச்சு நடக்கிறது. எளிமையும், ஓரளவுக்கு நேர்மையும் உடைய கம்யூனிஸ்ட்களே, கடந்த தேர்தலின்போது, தி.மு.க.,விடம், பல கோடி ரூபாய் பெற்றனர் என்றால், வேறு என்ன சொல்வது! இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த, அத்தனை சிறு கட்சிகளும், நிச்சயம், 'பெட்டி' வாங்கியிருக்கும்.
அதெல்லாம் மறக்க முடியுமா? dinamalar.com
கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ – மெயில்' கடிதம்:
தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், திருக்குவளை சிவன் கோவிலில் இசைக் கலைஞராக பணியாற்றியவர். அவர் வழியில் வந்த குடும்பம் தான், ஹிந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது.சங்கராபுரம் முன்னாள், எம்.பி., ஆதிசங்கரரின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப் பார்த்து, 'ரத்தம் வடிகிறதே…' என பரிகாசம் செய்தார், கருணாநிதி.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி மற்றும் மருமகள் துர்கா ஆகியோரது நெற்றியில் இருப்பது மட்டும், அவருக்கு ரத்தமாக தெரியவில்லை.
கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ – மெயில்' கடிதம்:
தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், திருக்குவளை சிவன் கோவிலில் இசைக் கலைஞராக பணியாற்றியவர். அவர் வழியில் வந்த குடும்பம் தான், ஹிந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது.சங்கராபுரம் முன்னாள், எம்.பி., ஆதிசங்கரரின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப் பார்த்து, 'ரத்தம் வடிகிறதே…' என பரிகாசம் செய்தார், கருணாநிதி.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி மற்றும் மருமகள் துர்கா ஆகியோரது நெற்றியில் இருப்பது மட்டும், அவருக்கு ரத்தமாக தெரியவில்லை.